Tuesday, October 6, 2009

வெண்ணையும் சுண்ணாம்பும்

எங்க வீட்டின் முன்புறம் சாலையில் வரிசையாக மூன்று புளியமரங்கள் இருக்கும், என் நினவு தெரிந்து இந்த மரங்களும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்துள்ளது. முதல் புளிய மரம் ஏறுவதற்கு சிரமம் மற்றும் பழமும் புளிப்பா புளிக்கும்,
நடுப் புளியமரம் ஏறுவதற்கு சுலபம். இதன் பூ,காய் மற்றும் பழமும் சிறிது இனிப்பாக இருக்கும். காயும் இல்லாமல் பழமும் இல்லாமல் இருக்கும் நிலை தெவுறு என்று சொல்வார்கள். இதுதான் எங்களுக்கு புடித்த ஒன்று. நாங்கள் நண்பர்கள் ஜவர் நான், சக்திவேல், கிறிஸ்டேபர், பூவேந்திரன் மற்றும் என் நாலாவது அண்ணா அனைவருக்கும் இந்த புளியமரம்தான் கூட்ட அரங்கு. அதுக்காக எங்க மரத்தடி பையங்கள் என்று நினைத்துவிடாதிகள். நாங்கள் அனைவரும் மரத்தின் மீது ஏறி அங்கு ஒரு இடத்தில் நாலு கிளைகள் பிரியும், அந்த இடத்தில் ஆளுக்கு ஒரு கிளையில் குரங்கு குட்டிகள் போல் உக்காந்து கொள்வேம். மரத்தில் இருக்கும் பூ மற்றும் தெவுறு பறித்து தின்றுகொண்டே ஊர்க்கதை பேசுவேம். நாங்கள் மரத்தின் மீது இருந்தால், அடர்த்தியான மரம் என்பதால் கீழே இருந்து பார்த்தால் தெரியாது. மூன்றாவது புளியமரம் உயரம் அதிகம்,பழங்கள் மிகவும் புளிக்கும், இது இல்லாம அந்த காலத்தில் பேய் ஓட்ட இந்த புளியமரத்தில்தான் ஆணியடிப்பார்கள். பாவம் அவர்களுக்கு நடு புளியமரத்தில் நாங்க ஜந்து பேய் இருப்பது தெரியாது. நாங்களும் அந்த மரம் பக்கம் போகமாட்டேம். ஏன் அதுகளை தெந்திரவு செய்யனும் இல்லை. அப்புறம் ஏரியாத் தகறாறு வரும். எங்களுக்கும் பேய்னா பயம். இந்த புளிய மரங்கள் அனைத்துக் காலத்திலும் உதவியா இருக்கும். பூக்கள் காலத்தில் பூக்களும், பிஞ்சுகளும் பின் காய்களும், பழங்களும் எங்களுக்கு போரடிச்சா சப்பிடற ஒன்னு.புளிய மரம், வேப்ப மரம்,வாதுமை மரம், கொய்யா மரம், நெல்லிக்காய் மரம் மற்றும் புன்னை மரம் எல்லாம் எங்க வீரத்தையும், திறமைகளையும் பறை சாற்றுபவை

அப்ப எல்லாம் பைஸடார், டைரிமில்க் கிட்காட் எல்லாம் எங்களுக்கு தெரியாது. நியுட்ரமுல் கம்பொனில வரும் பச்சக்கவர் போட்ட ஜந்து காசு சாக்கி(இது காஸ்ட்லி), எப்பாது ஒருதரம் சாப்பிடுகின்ற ஜெம்ஸ்தான் சாக்கி(அதான் சாக்லெட்). ஜவ்வு மிட்டாய், கம்மர் கட், கடுக்கு மிட்டாய், சாய(சாக்கிரின்)மிட்டாய்(இது ரோஸ் கலருல லிப்ஸ்டிக் ஆக உதவும்), சூட மிட்டாய்(பெப்பர் மிண்ட்), ஒரு பைசா ஆரஞ்சு மிட்டாய்,எலந்த வடை, எலந்த பழம். ஒரு பைசா சக்கரை கலர் மிட்டாய்(ஜெம்ஸ் டுப்ளிகட்) எல்லாந்தான் நாங்க வாங்கி சாப்பிடுகின்ற மிட்டாய் வகைகள் தினமும் எங்க வீட்டுல நாங்க அமைதியாய் இருக்க பத்துப் பைசா லஞ்சம் தருவாங்க. அதுலதான் வாங்கிச் சாப்பிடனும். ஆனா எங்க குழுவுக்கு இது எல்லாம் கவலை இல்லை. இந்த மரத்தின் புளியங் காய்கள், கோடி வீட்டில் உள்ள கொய்யாக் காய்கள்(பழுக்க விட்டாதான), என் நண்பன் வீட்டில் உள்ள நெல்லிக்காய், டாக்டர் வீட்டில் உள்ள பாதாம் பழம் மற்றும் ஆத்துமேட்டில் உள்ள நாவல் பழம்,கடையில் விற்கும் மாங்காய், நொங்கு,பலாச் சுழை.எங்க அப்பா அலுவலகதில் உள்ள எலந்த பழம், பப்பாளி பழம் எல்லாம்தான் நாங்க சாப்பிடற பழவகைகள். கவலையே இல்லாம பறிச்சு சாப்பிடுவேம். எல்லாரும் தெரிந்தவர்கள் என்பதால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். எங்கள் உயர் நிலை மற்றும் ஆரம்ப பள்ளி என் வீட்டில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் என்பதால் நாங்கள் தினமும் நாலு முறை கலை, மதியம்,மாலை நடப்போம். தினமும் மூனு கிலோமீட்டர் நடந்தாலும் எங்களுக்கு நண்பர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டும், வழினெடுக இருக்க புளிய மரத்தில் கல் எறிந்து காய் பறித்து தின்றுகொண்டு நடப்போம். வீட்டில் மதிய உணவு கட்டித் தந்தாலும் மறுத்துவிடுவேம், வந்து சப்பிட்டுத் திரும்பி போவேம்.

ஒரு முறை ஆத்துமேட்டில் எங்க அண்ணன் நாவல் பழம் பறிப்பதற்காக மரத்தில் கட கடவென ஏறினான். அவன் கிளைய்யை உலுக்க நாங்கள் பழம் பொறுக்க வேண்டும். அவன் ஏறி முடித்ததும் நான் அன்னாந்து பார்த்தால் எனக்கு அதிர்ச்சி. அவன் இருக்கும் கிளை கிழே படம் எடுத்து தொங்கியது ஒரு நாகப்பாம்பு. நான் மற்றும் நண்பர்கள் அண்ணா பாம்பு என்று கத்த அவன் எங்க என்று கேட்டு பாம்பு இருக்கும் கிளைக்கு அருகில் நெருங்கினான். கிழே இறங்கவும் முடியாமல் மாட்டிக்கொண்டான். ஏன் என்றால் அவன் இருக்கும் கிளைக்கு அடியில் பாம்பு இருந்ததால் இறங்க முடியாது. நாங்க விழித்து நிற்க எங்க அண்ணன் மட்டும் ஒரு நிமிடமும் யோசிக்காமல் அங்கிருந்து (பதினைந்து அடி உயரம் இருக்கும்) ஆற்றுத் தண்ணிரில் குதித்தான். எனக்கு பயத்தில் பேச்சு வரவில்லை நடுக்கத்தில் தண்ணிரில் ஓடினேன். ஆனால் நல்லவேளையாக அந்த இடத்தில் இடுப்பளவு தண்ணிர் இருந்ததால் ஒன்றும் ஆகவில்லை. நான் அவனிடம் இப்படி குதிக்கறியே, கால் உடைந்தால் அல்லது தண்ணிர் அடியில் பாறை இருந்தால் என்ன ஆகும்? என்றேன். அவன் சிரித்துக் கொண்டு என்ன ஆகும் ஒன்னு மண்டை உடையும் இல்லை கால் உடையும், ஆனால் மரத்தில் இருந்தால் உயிர் போய்விடும் பரவாயில்லையா என்றான்.

இப்படி எங்கள் சிறுவயதில் எந்த கவலையும் இல்லாமல் நாங்க வாழ்ந்தோம். எங்களுடய விளையாட்டுகள் யாவும் சுலபமான காசு செலவு வைக்காத விளையாட்டுக்கள். டயர் வண்டி, நொங்கு வண்டி, கில்லித் தாண்டல்,தடி கல்லின் மீது தடி வைத்து விளையாடுதல்,எறிபந்து, குழிபந்து,பம்பரம், தாயக் கட்டை,பரமபதம். சில்லுத்தாண்டுதல், ஜான் கல் மற்றும் சைக்கிள் டுயூப்ல பண்ண பந்து வைத்து மரப்பலகையில் பேட் செய்து, கருவேல முள்ளுக்கு குச்சியை ஸடம்ப் ஆக்கி விளையாடுவேம். மாலை பள்ளி விட்டு வந்தால் ஆறு அல்லது ஆறறை மணி வரைக்கும் விளையாடி விட்டு இடைவேளை சாதம்னு இரண்டு மூனு உருண்டை சாதம் சாப்பிட்டு படிக்க உக்காருவேம். அங்க அங்க கைல கால்ல அடிபடும் அவ்வளவுதான். ஆனா நல்ல ஆரோக்கியமா இருப்போம். ஆனா இப்ப பாருங்க பசங்க சரியா விளையாடம கார்ட்டுன்ஸ் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆடி நிறைய சிறு பசங்க கண் கன்னாடி மற்றும் ஆரோக்கிய குறைவா இருக்காங்க. அடிக்கடி மருத்துவ செலவு வைப்பாங்க. நான் என்ன சொல்லறனா தினமும் பசங்களை ஒரு மணிநேரம் ஒடி ஆட விட்டிங்கனா நல்லா சாப்பிட்டு நல்லா இருப்பாங்க, இங்க சிங்கையிலும், சென்னையிலும் நிறையப் பசங்க கன்னாடியும் பார்க்க ஆரோக்கியம் இல்லாம இருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு நான் சிறுவயதில் நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கன்னு சொல்லத் தோனுது. இந்த பசங்களாவது பரவாயில்லை எப்போதும் வேடிச் சத்தங்களுக்கு இடையிலும், முள்வேலி முகாமிலும் அடைந்து இருக்கும் நம் தமிழ்ச் சிறுவர்கள் வாழ்க்கையின் எல்லா இன்பங்களும் தொலைத்து இருப்பார்கள். பஞ்சத்தால் வாடும் எத்தியோப்பாவில் வாழும் உடல் மெலிந்த சிறுவர்களைப் பார்க்கும் பொழுது மனது சங்கடத்துடன் வயிறு பிசையும். கடவுள் ஏன் ஒரு கையில் வெண்ணையும் மறு கையில் சுண்ணாம்பும் தருகின்றார்.

பி.கு: இந்த புளிய மரத்தில் இருந்து புளியம்பூ எடுத்து எங்க வீட்டில் இரண்டு அல்லது மூன்று முறை புளியம் பூ தொக்கு செய்வார்கள் அது எப்படி என்று என் சமையல் பதிவில் பாருங்கள். இப்படி எந்த கவலையும் இல்லாம வாழ்ந்தாலும் ஒரு கவலை மட்டும், ஒரு நாள் மட்டும் இருக்கும். அதன் மார்க்ஸிட்ல கையேழுத்து வாங்குறப்ப வரும், அதுகூட நான் சுமாரா படிக்கறதுனால, இப்படி திங்கு, திங்குனு ஆடறியே, இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சு அதிக மார்க் வாங்குனா?, துரை கெட்டா போய்விடுவா? என்று திட்டு மட்டும் எங்க பெரியண்ணன் நற்சான்றிதழா கொடுப்பாருங்க. நன்றி

1 comment:

  1. சற்றேறக்குறைய இதே அனுபவங்கள், பெரியண்ணன் சான்றிதழ், எல்லாம் 11 வயசுக்குள்ள அனுபவிச்சாச்சு.

    என் ஃப்ளாஷ்பேக்கை நானே பார்த்துக் கொண்டது போன்ற உணர்வு.

    என் முதல் பதிவு பாருங்களேன்.

    http://positiveanthonytamil.blogspot.com/2007/12/blog-post.html

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.